作曲:D. Imman
அண்ணே யாரண்ணே மண்ணுல உன்னாட்டம்
உன்ன கண்டாலே நெஞ்சில கொண்டாட்டம்
அண்ணே யாரண்ணே
அண்ணே யாரண்ணே
அண்ணே யாரண்ணே மண்ணுல உன்னாட்டம்
உன்ன கண்டாலே நெஞ்சில கொண்டாட்டம்
தல கோதிடும் உன் பாசம்
குல சாமிய மிஞ்சாதோ
மனம் வாடுற போதெல்லாம்
உயிர் நீரையும் தூவாதோ
கடல் ஆழம் உந்தன் அன்பே என்று
சொல்லிட சொல்லிட உள்ளமும் பொங்காதோ
என்ன சுத்தும் பூமி எங்க அண்ணன்
எட்டு திக்கும் சாமி எங்க அண்ணன்
என்ன சுத்தும் பூமி எங்க அண்ணன்
எட்டு திக்கும் சாமி எங்க அண்ணன்
அண்ணே யாரண்ணே மண்ணுல உன்னாட்டம்
உன்ன கண்டாலே நெஞ்சில கொண்டாட்டம்
அண்ணன் எனும் வார்த்தை
நான்கெழுத்து வேதம்
உள்ளவரை நானும்
சொல்ல அது போதும்
உத்தே நீ பார்க்க
உள்ளிருக்கும் சோகம் ஓடாதோ
செத்தே போனாலும்
உன் குரலில் வாழ்வே நீளாதோ
பொன்னையும் காசையும் விரும்பும் பூமியிலே
அண்ணனின் மூச்சுதான் தங்கையென
சொல்லிட சென்றுவிடும் சஞ்சலங்களே
என்ன சுத்தும் பூமி எங்க அண்ணன்
எட்டு திக்கும் சாமி எங்க அண்ணன்
என்ன சுத்தும் பூமி எங்க அண்ணன்
எட்டு திக்கும் சாமி எங்க அண்ணன்
அண்ணே யாரண்ணே மண்ணுல உன்னாட்டம்
உன்ன கண்டாலே நெஞ்சில கொண்டாட்டம்
தல கோதிடும் உன் பாசம்
குல சாமிய மிஞ்சாதோ
மனம் வாடுற போதெல்லாம்
உயிர் நீரையும் தூவாதோ
கடல் ஆழம் உந்தன் அன்பே என்று
சொல்லிட சொல்லிட உள்ளமும் பொங்காதோ
என்ன சுத்தும் பூமி எங்க அண்ணன்
எட்டு திக்கும் சாமி எங்க அண்ணன்
ஓஓ என்ன சுத்தும் பூமி எங்க அண்ணன் ஆஆ
எட்டு திக்கும் சாமி எங்க அண்ணன்
அண்ணே யாரண்ணே மண்ணுல உன்னாட்டம்
உன்ன கண்டாலே நெஞ்சில கொண்டாட்டம்
அண்ணே யாரண்ணே