作曲:S. A. Rajkumar,S. A. Rajkumar,Muthuvijayan
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
அடி நீதான் என் சந்தோசம்
பூவெல்லாம் உன் வாசம்
நீ பேசும் பேச்செல்லாம் நான் கேட்க்கும் சங்கீதம்
உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வம்மடி
நீ இல்லையென்றால் நானும் இங்கே ஏழையடி
நெடுங்காலமாய் புழங்காமலே
எனக்குள்ளே நேசம் கிடக்கின்றதே
உனை பார்த்ததும் உயிர் தூண்டவே
உதடுகள் தாண்டி தெறிக்கின்றதே
தறிசான என் நெஞ்சில் விழுந்த ாயே விதையாக
நீ அன்பாய் பார்க்கும் பார்வையிலே என் ஜீவன் வாழுதடி
நீ ஆதரவாக தோள் சாய்ந்தால் என் ஆயுள் நீளுமடி
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா (ம்ம்ம் ம்ம்ம்)
மழை மேகமாய் உருமாறவா
உன் வாசல் வந்து உயிர் தூவவா
மனம் வீசிடும் மலராகவா
உன் கூந்தல் மீது தினம் பூக்கவா
கண்ணாக கருத்தாக உனை காப்பேன் உயிராக
உனை கண்டேன் கனிந்தேன் கலந்தேனே
அட உன்னுள் உறைந்தேனே
இன்று என்னுள் மாற்றம் தந்தாயே
உனை என்றும் மறவேனே
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
அடி நீதான் என் சந்தோசம்
பூவெல்லாம் உன் வாசம்
நீ பேசும் பேச்செல்லாம் நான் கேட்கும் சங்கீதம்
உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வமடி(ம்ம்ம்ம்ம்)
நீ இல்லையென்றால் நானும் இங்கே ஏழையடி(ம்ம்ம்ம்ம்)